செவ்வாய், 15 மே, 2018

வாங்கச் சுவைத்து உண்ணலாம்

அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம் நலம் நலம் அறிய ஆவல். கொஞ்சம் தூசு தட்டிப் பொட்டியை அழுத்தலாமென்று நினைத்து வந்தேன் மறுக்கா வணக்கம் வச்சுக்கிறோனுங்க . 

என்னடா இவன் எழுதுவதே புரியாது இதுல வணக்கம் வேற வச்சிருக்கான் , அதும் தலைப்பு ”வாங்க சுவைத்து உண்ணலாம்”னு வேற வச்சிருக்கான் என்ன பண்ணப் போறானோ எல்லாம் அவன் செயல் . அதே தாங்க அப்புடியே உங்களோட மனநிலையிலிருந்து எழுதுகிறேன் . 


சரிங்கப் பதிவுக்குப் போயிடலாம் விட்டா நான் கிறுக்குத்தனமாப் பேசிட்டே இருப்பேன் . அதாகப்பட்டது கடந்த ஆடி மாதம் ஆரம்பித்த குதிகால் வலிப் பாதத்தைத் தரையில் வைக்க முடியாமல் தொடர்ந்து ஐப்பசி-தை மாதம் வரை ஆங்கில வைத்தியம் ஆகார மாற்றம் அப்படி இப்படியென்று குதிகாலில் ஊசியின் மூலம் மருந்தும் செலுத்தினர். விடுவேனா என்றந்த வலி ஆகா ஆகா ஆகா என்று சிரித்துக் கொண்டே இருந்து. 


பக்ரைனில் நம் நாட்டு மருத்துவர்கள் மீது நம்பிக்கைச் சுத்தமாகப் போனது ஏனென்றால் குதிகாலினுள் மருந்துச் செலுத்தியும் வலி தொடர்கிறதென்றச் சொல்லுக்கு ! தம்பி நான் வேண்டும் என்றால் இலவசமாக இன்னொரு முறை மருந்து செலுத்துகிறேன் உன் குதிகாலில் என்றார் . எப்படியிருக்கும் எனக்கு என்று சொல்லுங்கள். ஆகா ! தினேசா உன்னை அப்படியே உபயோகிச்சுக்குவாங்கன்னு நம்மக் கிளிச் சொல்ல உள்ளே தெளிவானது. ஒரு மாதம் விடுப்பெடுத்து ஊருக்கு வந்து சேர்ந்தேன் . 





வந்ததும் வந்தேன் பிறந்த மண்ணுக்குப் பிரண்டைத் துவையலும் முடக்கறுத்தான் கீரைத் தோசையும் காலை உணவாக அம்மாவின் கையால் கிடைக்க உண்டுவிட்டு முதல் வேலையாக எலும்பு மருத்துவரை சந்திக்கச் சென்றேன் , அவர் என்னைப் பரிச்சோதித்துக் குதிகாலில் உள்ள சதைப் பகுதிச் சுருங்கிப் போயுள்ளது இருபது நாட்கள் நான் கொடுக்கும் மருந்துகளைக் கழித்து வாருங்கள் குணமாகிவிடும் என்றார் ஆனால் கொடுத்த மருந்துகள் அனைத்தும் வலியை மருக்கச் செய்வதற்காக உண்டானவை. எனக்கு நம்பிக்கைப் போனது பக்ரைனிலும் அதே வலி மருள் மருந்துகள் தான் கொடுக்கப்பட்டது இங்கேயும் இப்படியா என்று சற்று யோசிக்க ஆரம்பித்தேன் . 


மருந்து எடுத்துக்கொள்ளவில்லை. சரியான தீர்வு வேண்டும் என்பதே எனக்குள் எழுந்த கேள்விகள் . அடுத்த நாள் விழுப்புரம் சென்றேன் சித்த மருத்துவம் படித்த மருத்துவரை சந்திக்கச் சென்றேன் சந்தித்தேன் அவர் முதலில் எந்தன் எடையைப் பரிசோதித்தார் 82 கிலோவாக இருந்தது, உங்கள் உடலில் அதிகக் கெட்டக் கொழுப்புகள் அதனால் கல்லீரல் பாதிக்கப்படும் தருவாயில் உள்ளது அதனால் தங்களுக்குக் குதிகால் வலி ஏற்பட்டுள்ளது . உடலின் எடையைக் குறைக்க உணவு முறைகளை மாற்றுங்கள் என்றார். 


அய்யா நான் காலை உணவாகப் பச்சைக் காய்கறிகள் மற்றும் பழங்களும் , மத்தியானம் சோறும் சாம்பாரும் அல்லது கூழ் , களி அல்லது கஞ்சும் துவையலும் , இரவில் கேழ்வரகு அல்லது கம்புத் தோசை இப்படி மாற்றி இரண்டு மாதங்கள் ஆகின்றன என்றேன் ( ஆங்கில மருத்துவர் இறைச்சியைத் தவிர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னதால் நானாய் தயாரித்த உணவுப் பட்டியலைக் கடைப்பிடித்தேன் ). 



சித்த மருத்துவரோ நீங்கள் கடைபிடிக்கும் உணவுமுறை தவறு நீங்கள் இனிப்பு வகைகள் அதாவது பழவகைகளே கழிக்கக் கூடாது உங்களுக்குச் சர்க்கரைத் துவங்க உள்ளது என்றார், எனக்கோ மேலும் அதிர்ச்சி. சரி நான் தரும் பட்டியல் படி உணவு எடுத்துக் கொள்ளுங்கள் என்று பட்டியலைக் கொடுத்தார், நானும் தயாரானேன். 


அதாவது 

காலை உணவு : 

மூன்று கோழிமுட்டை எப்படி வேண்டுமானாலும் சமைத்து எடுத்துக் கொள்ளலாம் 

மத்தியான உணவு : 

ஆடு அல்லது கோழி இறைச்சிச் சமைத்துச் சோறில்லாது வயிற்றுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்ளலாம் (சோறு மட்டும் எடுக்கக் கூடாது வேண்டுமென்றால் ஒரு கரண்டிச் சோற்றைத் தொட்டுக் கொள்ளலாம்) 

இரவு உணவு : 


முட்டை அல்லது இறைச்சி 


இடையிடையே பசித்தால் எலுமிட்சைச் சாறு அல்லது தயிர் மோர் அல்லது பாதாம் எடுத்துக் கொள்ளலாம் . 


ஒட்டு மொத்தமாகச் சொன்னால் இறைச்சி முட்டையைத் தவிர வேறெதுவும் எடுத்துக் கொள்ளக் கூடாது இதானுங்கு . 


அவரும் சில பல குளிகைகளைக் கொடுத்தார் சா.மு , சா.பி என்று மனதையும் வாயையும் கட்டிப் போட்டுவிட்டுச் சம்மதித்து ஏற்றுக்கொண்டு செயலில் இறங்கினேன் . முதல் நாள் மிகவும் சிரமப்பட்டு உணவருந்தினேன் முதல் நாள் மட்டுமல்ல பதினைந்து இருபது நாட்கள் சிரமப்பட்டே உணவருந்தினேன் ஏனென்றால் நான் விரும்பி உண்வதோ சாம்பாரும் காய்கறிகளும் அதை விட்டுவிட்டு இறைச்சியை உண்வது எனக்கு அதிகம் பிடிக்கவில்லை . 


சரி வலிக் குறைந்ததா என்றால் அதுவும் இல்லை எடையாவது குறைந்ததே கொஞ்சம் என்றால். 


பின்னக் குறையாம என்னப்பண்ணும் ”விரும்பிச் சுவைக்காத உணவு” என்ன பயன் தரும் என்று நீங்களே சொல்லுங்களேன் 


கலியுகம் : தூசெல்லாம் தட்டியாச்சு அடுத்தப் பதிவில் சந்திக்கிறேன் இதுவே நீளமாக இருக்கிறது . கவிதைக்காரனுக்கு என்ன ஆயிற்று என்று புலம்ப வேண்டாம் . கண்டிப்பாக இந்தப் பதிவின் தொடர் வந்து கொண்டே இருக்கும் . நீங்களும் வாங்கச் சுவைத்து உண்ணலாம்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நம்பிக்கையுடன் தொடர வாழ்த்துகள் தோழர்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி