திங்கள், 20 ஏப்ரல், 2015

"கர்மமெதோ கூற்றுமாகி"


1.கண்டதும்கொள் காரியமே மாயையாகும்
         காரணச்சொல் காணத் திறவும்
கொண்டதும்கொள் கர்மமெதோ கூற்றுமாகிக்
         குன்றமர்ந்து கொண்டே கொடுக்கும்
கொண்டவுருக் கண்டததே கோளமிரும்
         கோயிலெங்கும் கூத்தன் குடிலாய்
வண்ணமலர்த் தோட்டமெங்கும் வந்தமருந்
        தென்றலுடை மாற்ற மயங்கேன்


2. கொண்டவன் கொள்ளக் கொடுத்தே கொலுவிரும் கோளத்தில்
கொண்டையில் கொன்றையும் கூந்தலில் கங்கையும் சூலமுடன்
தொண்டையில் ஆலகாலம் தீண்டிடும் நாகப் பதமணியாய்
தொண்டனுன் தோற்றத்தைத் தீட்டிவிட்டான் தங்கிடும்நீ ஆட்கொள்ளே


3. கண்டவர் காணாக் கடவுவர் தானகமே 
கண்டவர் காணக் கயவரும் ஆனவரே
கண்டவர் காணுங் கடனுரு வானவரே
கண்டவர் ஞானக் கருபொரு ளானவரே

4.
கோபத்தீ மூட்டாதே கோணத்தை மாற்றாதே 
சாபத்தை ஏற்காதே சாரத்தைத் தூற்றாதே
தீபத்தைப் போலுந்தன் தேகத்தைக் கற்றாலே
தாபத்தீ விட்டோடும் தானென்றேத் தானாகும்

வெள்ளி, 17 ஏப்ரல், 2015

"கூற்றிலே கூத்தினைக் காண !"

1.சித்திரப் பூவினிற் தேனோ 
       சிந்தையி லூற்றெடும் தேனோ 
சத்திர யெந்திரம் தானோ 
       சந்தையில் விற்றுவந் தானோ 
சித்தனும் சத்திரம் தேட 
       சீதன மாகிடு வேனே
சித்திரக் கட்டடம் தங்க
      சிந்திடும் தூரிகை ஆவேன்

2.கூற்றிலே கூத்தினைக் காண 
      குந்திடுங் கூட்டமில் நானும் 
சேற்றிலே செம்மையைக் காண 
      சேர்ந்திடும் பொன்வயல் ஆடல் 
காற்றிலே கானலின் தூது 
      காலமும் மாறுதோ பாடம்
நேற்றவன் நெய்தது யாதும்
      நீர்த்ததன் வேர்த்துளி ஆகும்

3.கனவிலு மாறாக் கணமேன் 
      கதவுக ளாடா மனமேன் 
நினைவுக ளோடே சமரேன் 
      நிழலதுப் போகா வடுவேன் 
கனிவது தானே பழமாம் 
     கடவது காணாப் பதமேன்
மனமது மாயா மரமே
     மறையது மாறா மயமே

4.வாடி சதியே வழியின்
      வனம்என் மனமாய்ப் பதியும் 
நாடி நகரும் நதியாய் 
       நலனில் நழுகா திருக்க
பாடி விழையேன் பதிநான் 
       பழமைப் பதிவாய் அமர்வேன்
தேடும் கடலில் அலையாய்த்
      திரண்டேன் தினமும் உனதாய்

சனி, 4 ஏப்ரல், 2015

"நானெனை நாடி வந்து"

1.காதலே னென்னைக் கட்டிக் 
        காட்டினில் விட்டுச் செல்ல 
   பாதகம் இல்லை முள்ளில் 
        பாதையை மறந்து போனேன் 
  சாதனை யொன்று மல்ல 
        சாதலைக் கொன்றேன் போதும்
  பாதையில் செல்லுந் தூரம்
        பாலனைப் போலா னேனே

2.மழையினி லிறங்கி ஆட 
        மனதினில் தணியும் தாகம் 
  பிழைதனில் பயண மார்க்கம் 
         பிரிவது தருமோ யோகம் 
  உழைத்திடு முயர்வின் தாக்கம் 
         ஒழுங்கினை வளர்க்கும் யாகம்
  பழமையை புகட்ட வாழ்வு
         பழமென நழுவும் பாலில்



3.நானெனை நாடி வந்து
        நாதனை தேடிச் சென்றேன்
   தானெனக் கண்டு கொள்ளச்
        சாதன மேது மில்லை
   கானகம் செல்லப் போரேன்
        காரணம் கொல்லப் போரேன்
   ஆனவை யெல்லாம் என்னில்
        ஆனவம் கொன்றால் கூடும்

4.காற்றினில் பரவும் தூசி 
        கானலின் விபரம் நேசி 
   நாற்றுநன் உயர்வை பேசி 
        நாட்டினில் விளைய யோசி 
   சேற்றினில் உழவர் ஆட்சி 
        சேர்ந்ததுன் பசிக்கு காட்சி
   ஊற்றெலாம் முழங்கிப் போனால்
        ஓடுவர் ஒதுங்கித் தானே

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி