கந்தனை போற்றி பொழியும் தமிழ்மறை
சிந்தனை ஊற்றுள் தவழும் மழலையாய்
சந்தம் அழகுடுத்தி சாந்தமெய் சூடுவன்
பந்தம் பழம்பிரித்து வர
சிந்தனை ஊற்றுள் தவழும் மழலையாய்
சந்தம் அழகுடுத்தி சாந்தமெய் சூடுவன்
பந்தம் பழம்பிரித்து வர
சொந்தம் எனதென்று அன்பும் அளவற்று
சிந்தும் மனதேரில் மக்களுனை காணும்
அழகனே ஆறுதலை அர்த்தம் முழங்கும்
பழம்நீ சிவஞான பழம்நீ
சிந்தும் மனதேரில் மக்களுனை காணும்
அழகனே ஆறுதலை அர்த்தம் முழங்கும்
பழம்நீ சிவஞான பழம்நீ
போற்றி நினைவெலாம் ஊற்றி உயர்பெரும்
காற்றுள் குழைத்தேனே வீற்று வளம்வரும்
சண்முகா செந்தமிழ் செண்பகப் பூச்சூடி
கண்ணுனை காணவே வா
காற்றுள் குழைத்தேனே வீற்று வளம்வரும்
சண்முகா செந்தமிழ் செண்பகப் பூச்சூடி
கண்ணுனை காணவே வா
-மோ.தினேசுகுமார் -
1 கருத்து:
வணக்கம்
அழகனைபற்றி அழகிய வரிகளில் சொல்லிய விதம் நன்று பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கருத்துரையிடுக