இன்றென்றென வெண்ணார்க்கரம் ஈன்றாளுவ காணே
நின்றுண்ணுவ கொன்றானென நீந்திச்செலல் காணே
அன்றெண்ணுவ இன்னார்க்குயர் அஞ்சாததைக் காணே
வென்றாளுவன் பொற்றாமரை மீட்டானெனக் காணே
நின்றுண்ணுவ கொன்றானென நீந்திச்செலல் காணே
அன்றெண்ணுவ இன்னார்க்குயர் அஞ்சாததைக் காணே
வென்றாளுவன் பொற்றாமரை மீட்டானெனக் காணே
பெற்றானெனை விற்றானெனப் பெய்யாமழை போர்த்தி
கற்றானவன் உற்றானுடை காற்றானவன் போர்த்தி
பற்றானது பந்தாளுவ பாராளுவன் கீர்த்தி
கற்றாளவன் மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி
கற்றானவன் உற்றானுடை காற்றானவன் போர்த்தி
பற்றானது பந்தாளுவ பாராளுவன் கீர்த்தி
கற்றாளவன் மெய்எல்லையெ கைதாகுவன் பூர்த்தி
மனபோக்கிலே கடந்தேயுகம் மயமாகுது தனிலே
எனதாக்கிட வினைதூவிடும் இயலாதவர் தனிலே
வனவாழ்வினை கடந்தாலென மணந்தானவன் வினையே
தனதாகிடும் உணர்வாலவன் உதயத்தினை விளைத்தே
எனதாக்கிட வினைதூவிடும் இயலாதவர் தனிலே
வனவாழ்வினை கடந்தாலென மணந்தானவன் வினையே
தனதாகிடும் உணர்வாலவன் உதயத்தினை விளைத்தே
விலையாவதும் கலையாவதும் வினைத்தான்விளை பொருளே
மலையேறுவன் மழைதேடுவன் மனைதானது மயங்காய்
உலைவேகுது உடன்வாடுது உழைத்தாலுடன் வசமே
நிலையாவது நினைவானது நிழல்தானது உணராய்
மலையேறுவன் மழைதேடுவன் மனைதானது மயங்காய்
உலைவேகுது உடன்வாடுது உழைத்தாலுடன் வசமே
நிலையாவது நினைவானது நிழல்தானது உணராய்