திங்கள், 4 மார்ச், 2013

காதல்(லை) படுத்தும் பாடு.....!



கசக்கி பிழிந்தென்னை காக்கும் கவியமுதே
காதல் விதைத்து உருகும் மணியமுதே
மாரிம ழைக்கொதுங்க இரையும் இசையமுதே
ஈடென்ன கேளேன் இனிது

 
மனங்கட்டி நாபேச தூதுபோ சொல்லுங்
கிளியே சிலையெட்டும் காரியமே மெல்லுங்
குயிலே மணமல்லி மாலையிட வெல்லுங்
கலையே கனவனைத்தும் கூட்டி


மயங்குது மல்லி மனமது தள்ளி
இயங்குது சொல்லி - மனமள்ளிஎ டுத்தானே
கள்ளி திகைத்தாளே எண்ணி நகையும்
சுவையான காதல் சுகப்பட


சந்திர மோகத்துள் மந்திர மாள்வது
தந்திர சேதிகன் சுந்தரமா வதும்நா
சிந்துமது சொந்தமணி வேடம் தனியா
இவைக்கு இரவது ஈவு


ஏழெட்டு கனியாக் காதலினை பார்த்ததுண்டு
ஏழைக்குள் ஏனிங்கு காதல்வித்து சாதலின்
ஆளுமை ஏற்றிவந்து நேசத்தின் பூட்டுக்கள்
தானவிழ்த்து தாலாத பட்டிக்குள் ஆடியடக்க
ம்
 

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி