சனி, 2 மார்ச், 2013

ஞானத்தை தேடி நலவானே நானும்....!

ஞானத்தை தேடி நலவானே நானும்
மானத்தை வேதம் சுடுமது பாரீர்
மனவத கானம் மலிவது சூடும்
மனமிகும் தானம் ஆகு.........


 யதார்த்தமாய் என்னை தேடிய பாதையில்
கொட்டிய குவியலாய் முத்துக்கள் மூலையில்
மூலனே முடிவிலா எண்ணத்துள் சிக்க
தினமங்கே ஓர்பார்வை பாவையாய்..........


கார்பெருங் கொண்டல் கயவனும் உய்ய
உதயனைம றைத்துமாரி ஊற்றாகி நேற்று
உபயம்செய தேக்கிடம டைத்தான் உரியனாகி
பார்க்கடல்ப டுத்தானை போற்றிட தூற்றான்........

  
பிறப்பினி ஏதோ மறவா இறப்பினி
மெய்க்கு உழப்பனி செய்திடு மறப்பணி
வேணோ இருப்பினி இந்தும் சகலமும்
சார்ந்துயர்த்த அகலும் கோணல்......


ஆற்றிலிடு வான்தேற் றிஅணைவான் போற்றி
உடையாள் தீட்டிய நாட்டிய மேடை
தடையேன் தவழ்ந்து தரணி யிலுருவாய்
தாளமி சைக்க அசைந்துயர்ந்து வாநீ........

 

1 கருத்து:

மகேந்திரன் சொன்னது…

இப்பாமாலை கேட்டு
ஞானக் கடவுள்
ஞாலம் செழிக்க
தாளமிசைத்து
தாண்டவமாடி
சடுதியில் வந்திடுவான்...

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி