காற்றிலாடும் சுடரே சுயம்பவன்
நேர்த்தியாய் நின்னலைப் படைத்துவக்கிய
தவத்திற னாற்றுவன தோற்ற தற்க்கினை
யாற்றும் யாவுமென் சிதையே
உயிர் மெய்க் கலவையாய் ஆயுதமேந்தி
வல்லிய திடைக்காக்க மெல்லிய தாகம்
சிந்திய சிதறலெங்கும் விருட்சமாய்
நிழற் தர தொடர்ந்தே
வல்லிய திடைக்காக்க மெல்லிய தாகம்
சிந்திய சிதறலெங்கும் விருட்சமாய்
நிழற் தர தொடர்ந்தே
இருகியப் பாறை கற்கண்டாய் உருகி
நற்க்கொண்டாய் நாவியல் சாற்றும்
முதற்கண்டோர் போற்றி நின்னை
சரணடைய வீழ்த்தும் தடாகம்
நீரன்றி வேர்த்து தூர்த்து மாயும்
சல்லடை சகிதம் அம்பு துளைக்க
நில்லாது பாயும் வல்லது மேனியிற்
சொல்லது தூவும் பிழை....!