ஞாயிறு, 25 மார்ச், 2012

ஓவியமாய் தீட்டி வச்சாங்க......!

அத்தனையும் படிச்சான் 
அங்கெங்கும் அலைந்தான் 
ஆள்பதற்க்கு மட்டும் திரையில்
ஆட்டம் போட்டவரை பிடித்தான்

இடிச்சப்புளி உலக்கயிலே
இளஞ்சிவப்பா இளிக்குதையா
ஈசன் கட்டுவான் இல்லாமல்
ஈட்டெடுக்கலாம் நாளை

உசிரக் குடிக்கான் மறுக்கா 
உரக்கம் தெளியவே யில்லை
ஊதிக் கொக்கரிக்க நாதியுமில்ல
ஊலைநரிக் கூட்டம் போட

எட்டி பார்க்குது எங்ககிட்ட
எட்டனா தான் எஞ்சி நிக்குது
ஏட்டையும் மாத்திபுட்டான்
ஏணியையும் தட்டிவிட்டான் 

ஐந்தும் அவர்கட்கே என்றால்

ஒட்டு துணிக்கேது வழி விரல்
ஒட்டிய மையை துடைக்க
ஓட்டாண்டி ஆக்கிவிட்டாங்க
ஓவியமாய் தீட்டி வச்சாங்க
 
ஔ..........................................

திங்கள், 5 மார்ச், 2012

பூவணி மாலையும் புன்னிய தேடலும் ...!


பச்சைத் தாவனி கட்டுவா யென்று 
பட்டதும் சுடலையில் பாவம் தீராய்
பல்லதுப் படாமல் மெல்லுவாயெனி
பசித்துறங்க பழகு

பார்த்ததும் பகுந்து விட்டாய் வேர்த்தது
பானைக்குல் பதுக்கி வைத்தாய் நீர்த்தது
பாவையின் விழிகளன்றோ அறியாப் 
பாவியாய் பல்லுருவில்

புசித்தது புகட்டி விட்டாய் எங்கோ
புயாலாய் கிளம்பிவிட்டாய் அங்கோர்
புலியென பரனை சுரண்டக் கண்டே
புல்லாய் மாற்றம் என்ன

பூவணி மாலையும் புன்னிய தேடலும் 
பூர்ணச் சந்திரனாய் புன்னகை தவழ 
பூவுலகு பசித்தும் புசித்துறங்கா நீதி 
பூரணத்துவம் காணா விடியல் 

நன்றி தோழி பிரஷா

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

முத்துச்சிதறல் அளித்த முத்தான முதல் விருது

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

அம்மா மனோசாமிநாதன் அவர்களுக்கு நன்றி

ஏட்டில் ஏறிய என் முதற்கனவு மாதங்களில் காதலி