ஏக பத்தினி விரதா
ராமா உன்னை
கரம்கொண்டு வணங்க
மறுக்கிறேன் மனதார
சுயநலத்தால் போரிட்டீர்கள்
சூழ்ச்சிகள் பல செய்து
சுடுகாடாய் அன்று
என் தமிழ் மனம் வாழும்
இலங்கை தீவு........
இன்றும் தனியவில்லை
நீரிருவர் செய்த
சூழ்ச்சியின்
சூழ்ச்சியின்
சூறையாடல் மனம்
குமுறுகிறேன் தமிழ்
காக்க கடவுள் யாரும்
இல்லையோ நின்
மேல் போர்தொடுக்க
தன்னை எதிர்க்க
எவரும் இல்லையென்று
தரணி யால்கிராயோ
தமிழை வதைத்து
இந்த பிஞ்சு உள்ளங்கள்
என்ன குற்றம்
செய்தன உனக்கு
பாரடா பார்
உடல் தின்று
பசி தீர்த்தவனல்லவோ
நீ .......
ஆஞ்சநேயரே
பெரும் தவறு
செய்து விட்டீர்
சுயநலவாதி
ராமனுக்கு உதவி
இனியாவது
பிறவிபலனை தேடிக்கொள்
பிறவிபலனை தேடிக்கொள்
என்மக்களை காத்து
ஏய் ஆதிக்க அரசாங்கமே
இனியாவது திருந்துங்கள்
என் நெஞ்சு வெடிக்கிறது
இந்த பிஞ்சு நெஞ்சங்களின்
சுடுகாடுகளில்.......
சீர்திருத்த வாதிகள்
சினம் கொண்டு
எழுந்தால் இப்புவி
தாங்காது புரிந்து
புறப்படுங்கள்..............
தமிழை நேசிக்கும் சுவாசிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு அடியேனின் தாழ்பணிந்த வணக்கம். நான் ஸ்ரீராமரையும், ராவணனையும் இங்கே எழுதிள்ளேன் அவர்களை இழுத்ததால் அவர்கள் தொடுத்த போர் இன்றும் முடிவுறவில்லையே என்பது தான் எனது ஆதங்கம் இந்திய அரசாங்கம் இன்றும் எதிரியாக(அகதிகளாக)த்தான் பார்க்கிறது (அதாவது ராமரின் பார்வையில் இலங்கை தமிழர்கள்) இலங்கை தமிழர்களை.சிங்களப் பார்வையில்(ராவணனின் பார்வை) அடிமாடுகளாய் தமிழ் இனம். நடப்பவை எல்லாம் உங்களுக்கே அறியும். இச்சிறு நெஞ்சங்களின் மரணங்கள் நெஞ்சை கதறச் செய்தன ஆத்திரம் கொண்டால் முறையிடவேண்டிய இடமல்லவா இது ராமனும் ராவணனும் ஆதியில் ஏற்படுத்திய தம் இருவரின் சுயநலத்திற்காக சூறையாடிய தமிழ் இனம் இன்றும் மாள்கிறது இலங்கையிலே..............
பயிர் விதைத்தவன் பகைக்கொள்ளலாமா
பரனையில் முளைத்திருந்த
மூன்று நெற்பயிர்கள்.............
நான் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை காலம் கடத்தும் காலக்
கடவுளை நம்புபவன்
கருவில் செய்த குற்றம் தான் என்னவோ
கருவரையில் சிதைக்கப்பட...........
குமுறுகிறது நெஞ்சம் ...........